பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

ஜேம்ஸ் ஆலன்



சிக்கனம் என்பது வெறும் பணச் சேமிப்பு மட்டுமின்றி ஆழ்ந்த கருத்துடையதும் நெடுந் தொலைவு எட்டக் கூடியதுமான ஒன்றாகும் என்பதை நாம் காணலாம். நமது இயல்பின் ஒவ்வொரு பருவத்தையும் அது தொடுகின்றது. “சிறு நாணயங்களைக் கவனித்துக் கொண்டால் போதும், பெரு நாணயங்கள் தம்மைத்தான் கவனித்துக் கொள்ளும்” என்னும் முதுமொழியை ஒரு நீதிக் கதையாகக் கொள்ளலாம்; ஏனெனின், மனிதரின் கீழ்த்தர இச்சைகளை இயற்கை அன்று என்று கருதினால், அவை தம்மளவில் தீயனவன்று; அந்த ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதே தீயதாகும்; ஆனால், இச்சைப்போக்கான இந்த ஆற்றலைக் கவனித்துச் சேகரித்து உருமாற்றிவிட்டால் அது குணயியல்பின் ஆற்றலாகத் திரும்பத் தோன்றிவிடும். ஆனால் நன்முறையில் பயன்படுத்துவதற்காக அதைக் கவனித்துக் கொள்வதென்பது இச்சைகளென்னும் சிறு நாணயத்தைச் சேகரித்து வைத்து நன்மையெனும் தங்கப் பெரு நாணயங்களைப் பெறுவதற்கேயாகும். எனவே, கீழ்நிலை ஆற்றல்களைக் கவனித்துக் கொண்டால் போதுமானது. மிக உயர்ந்த பேறுகள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும்.

சிக்கனம் எனும் தூண் உறுதியகாகக் கட்டப் பெற்றிருப்பின், அது பெருமளவும் இந்த நான்கு பண்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

1. மட்டு 3. வளப்பம்
2. திறப்பாடு 4. உற்பவம்