பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

 இன்றைய உலகில் ஒவ்வொருவரும் எப்படியாவது உயர வேண்டுமென்றும் புகழ்பெற வேண்டுமென்றும் சிறப்புற வேண்டுமென்றும் துடிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வழி வகைகள் தெரிவதில்லை. இக் குறையை நீக்கப் பல பேரறிஞர்கள் உலகெங்கும் வாழப்பிறந்தவர் களுக்கு வழிகாட்டிகளாகத் தோன்றியுள்ளனர். அவர்கள் கலங்கரை விளக்குப் போன்றவர்கள். அவர்களுள் ஒருவரே ஜேம்ஸ் ஆலன் அவர் மனித வாழ்வு சிறப்பதற்காகப் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தமிழில் தர பலர் முயன்றுள்ளனர். அவர்களுள் நாடறிந்த தமிழில் ஆழங்கால் பட்ட புலவர் த. கோவேந்தனும் ஒருவர். அவர் துணையால் வெற்றிக்குரிய எட்டு வழிகள் நூல் வெளிவருகின்றது மக்கள் பயன்கொள்க.

இவண்
நா. பாலகிருஷ்ணன்.