பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

ஜேம்ஸ் ஆலன்


கண்டறியாமலோ ஒப்புக் கொள்ளமலோ இருப்பவனும், அவை சுட்டிக்காட்டப்படுகின்றபோது பொல்லாங்கு கொள்பவனும் திறமை அற்றவனும், தவறான மனச்சார்புடைய மனிதனாவான்.

முன்னேற்ற நோக்குடைய மனிதன் தன் தவறுகளைக் கொண்டும், பிறருடைய தவறுகளைக் கொண்டும் திருந்தி விடுகின்றான். நல்ல அறிவுரையை நடைமுறைப் படுத்திச் சோதனை செய்ய அவன் எப்போதுமே ஆயத்தமாக இருக்கின்றான்; தன் வழிமுறைகளில் என்றென்றும் பெருகுவதான நுட்பத்தைக் குறியாகக் கொள்கின்றான். அது மேன்மைக்கும் மேன்மையான நிறைவு நிலையினையே குறிக்கும். ஏனெனின், நுட்பம் நிறைவு நிலையாகும். ஒரு மனிதனின் தனித் தன்மையுடையவும், நிறைவு நிலையுடைவும் அளவே அவனுடைய நுட்பத்தின் அளவுமாகும்.

பயனோ பயனுடைமையோ ஒருவன் உழைப்பிலுள்ள வழிமுறையின் நேரடி விளைவாகும். முறையாகப் பின்பற்றப் படுகின்றபோது தன் உழைப்புப் பயனுடையதும், ஆதாயமுடையதுமான விளைவுகளுக்கு வந்துறுகின்றது. தோட்டக்காரன் நல்ல விளைச்சலில் வருவாய்த் தேடவேண்டியிருப்பின், சரியான நேரத்தில் விதைக்கவும், நடவும் வேண்டும். எந்த உழைப்பினுடைய விளைவுகள் பயனுடையதாயிருக்க வேண்டுமாயின், அது பருவத்திற்கேற்பச் செய்யப்பட வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கின்ற வாய்ப்பினைக் கடந்து போக விடுதல் கூடாது.

நடைமுறைப் பயன் கருதா மக்கள், பயனற்றதும்,