பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. தோவேந்தன் 108

அந்தப் புனிதமானவரின் பணிப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

அதனால் அமைதி அவர்களுடன் நிலைகொள்கிறது. மனிதர்களுடன் நடந்து செல்கிறார்கள்; ஆனால் காணப்படுவதில்லை.

உள்ளத்தின் ஆழத்திலுள்ள மனப்போராட்டங்களை யெல்லாம் விட்டு விடுகிறார்கள்.

எவரையும் வெறுப்பதுமில்லை, எவரையும் தாழ்த்திக் கூறுவதுமில்லை.

மன்னிக்கும் அரண் வாயிலை அடைந்துள்ளார்கள். நல்லெண்ணமே அவர்களின் ஒவ்வொரு மூச்சும், பேச்சும்;

எல்லையில்லா அறவுணர்வே அவர்தம் எண்ணங்களின் தலைவன்.

வீணான பேரவாவுகளுக்காக அலைவதிலிருந்து விடு பட்டுள்ளார்கள்.

அதிகரித்து வரும் ஆசைகளைத் துரத்தியுள்ளார்கள். சகத்திற்கான வாயிலைத் தாண்டிச் சென்றுள்ளனர்; தாங்களாகவே தங்களைப் பணிவெனும் ஆடையைத் தரித்துள்ளனர்.

தன்மைக்கான வழியில் உறுதியுடன் நடந்து செல் கின்றனர்.

அச்சமும், ஐயப்பாடும், அவர்களால் கலைக்கப்பட்டு உள்ளன.

துயரம் என்னும் கொந்தளிக்கும் நீரில் நடந்து செல் கின்றனர்.