பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 105

எந்தவித முணுமுணுப்புமின்றி உலகத்திற்கு உரிமை யான எல்லாவற்றையுமே அவர்கள் உலகத்துக்கே வழங்கி விட்டார்கள்.

குழப்ப முகில்கள் அவர்களை இருட்டுவதில்லை. வெறி உணர்ச்சித் தீச்சுடர்கள் அவர்களைச் சுட்டு எரிப்பதில்லை.

ஆகையால், மகிழ்ச்சியே ஆட்சி புரியட்டும்! இக் காலங்களிலுள்ள கடும் இருளுடன் பெருமை வாய்ந்த ஒளியும் பரவட்டும்;

துயரத்தின் ஆறுகள் உயரத்திற்கு எழுந்து பாய்ந் தாலும்,

இன்ப மலர்களால் ஆற்றங்கரைகள் நறுமணம் கொள் கின்றன.

மனப்போராட்டம் தீவிரம் அடைந்தாலும், அதன் இடை யில் அமைதி புகுந்துள்ளது.

நானிலத்தைக் குழப்பங்கள் மூடியிருந்தாலும்கூட, ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டது;

மிகுதியானவர்கள் பொய்யான கனவுகளைத் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தாலும் பெருமைமிக்க மெய் உருவின் தோற்றம், உறக்கம்விட்டு எழுந்தவர்களின் அறிவை மகிழச் செய்துள்ளது.

உறங்குபவர்களே! விழித்தெழுங்கள்! கனவு காண்பவர் களே! நீங்களாகவே எழுந்திருங்கள்!

நீங்கள் எப்போது உங்கள் கண்களைத் திறந்து பார்ப் Istifascit ?

நிறைவு பெற்றவர் தோற்றமாகியுள்ளார்!

அந்தப் புனிதரின் புரையற்ற மேன்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது;