து. கோவேந்தன் j 11
எல்லாத் துயரங்களையும் தாண்டிச் செல்வது அன்பு -
அமைதி வழியில் எல்லாம் நிறைந்தவரை தேடுவ வர்கள், அவரை அடையும் பேற்றைப் பெறுவார்கள்.
நான்காவது முற்றுணர்வு ஆறுதல் இன்மை
மானிடச் சிறுவர்களுக்குத் தூய உள்ளுயிர்ப்பின் குரல்:தீவினையினால் அடிமை படுத்தப்பட்டது-அதுவே இருள்;
பற்றினால் விடுதலை பெறவுள்ளது-அதுவே ஒளி. இருள் படர்ந்த இடம் ஒன்று உள்ளது; மிகுந்த இருளின் இருப்பிடம் அது;
அங்குள்ளவர்கள் ஆறுதலின்மையால் கதறி அழு கிறார்கள்.
அந்த அழுகுரல்கள் தன்னலமுடையவை, அதனால் அவை கேட்பதில்லை.
அவர்களின் கடவுளை அவர்கள் அழைக்கிறார்கள், ஆனால் அமைதி கலைக்கப்படுவதில்லை;
அவர்களுடைய குரலின் எதிரொலியையே அவர்கள் கேட்கிறார்கள், அது அவர்களைப் பயமுறுத்துகிறது.
அதனால், அவர்கள் தங்கள் தீவினைகளின் இடை யிலேயே இருக்கிறார்கள்.
அப்படி இருந்தவாறு, அவர்கள்
சகோதுமை விதைத்தோம், வெறும் வைக்கோலையே அறுவண்டை செய்துள்ளோம்;