1 14 வெற்றிமேல் வெற்றி பெற...
இருள்மிக்க குடியிருப்புகளிலும், அவர்களுக்குத் தீர்வு மில்லை.
போக்கும் இல்லை,
இரட்சிப்பும் இல்லை.
எங்கே தன்னலம் ஆதிக்கம் புரிகிறதோ அங்கே. அமைதி இல்லை.
தூய்மை அற்ற வழியில் செல்லும் நீங்கள்,
தன்னலத்தின் குடிமக்களாக இருக்கும் நீங்கள்,
விலக்க் கொள்ள முடியாவிட்டாலும், செவிசாயுங்கள்.
கேளுங்கள் அந்த முன்காணியின் வாய் மொழிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காலம் வரும்.
தீயினால் சுடப்பட்ட குறிபோல அவரின் சொற்கள் நெஞ்சத்தில் தீக்குறிப்பட்டுள்ளன.
இருள்மிக்க இரவு உங்களைத் தாக்கும்போது;
உணவு வறுமையைவிட அதிக பசி வாட்டும்போது,
இறப்பைவிடக் கூடுதலான இழப்பு ஏற்படும்போது,
அன்பானது வதைக்கப்பட்டு சிலுவையில் அறையப் பட்டு பகை விடுவிக்கப்படும்போது, அமைதி அகற்றப் பட்டுப் பகைமை புகழப்படும்.
நேர்மை இகழப்பட்டுக் குழப்பம் கொந்தளிக்கும்போது;
அந்த முன்காணியின் குரல் இனிமேல் கேட்காது;
அந்த நேரத்தில் மட்டும் நீங்கள் வந்து அழும்போது, அந்த அழுகுரல் கேட்காது.
துன்பத்தால் இன்னலை நுகர்பவர்கள் தீர்வு பெறு வதில்லை.