பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வெற்றிமேல் வெற்றி பெற.

ஆறாவது முற்றுணர்தல் இன்னமைதி

உண்மையின் குழந்தைகளுக்குப் புனித ஆவியின் குரல்

களி கூருங்கள், மகிழ்ந்திருங்கள்!

ஆம்! மகிழ்ச்சி உங்களில் நிரம்பட்டும்!

ஏனெனில், பெருமை மிக்க கடமை நிறைவேற்றப் பட்டது;

அதனால், மேலும் முயற்சி செய்வதற்கு இல்லை;

மிக நீண்ட பயணம் முடிவுற்றது,

அதனால் மேலும் கன்னப்பு அடைய வேண்டிய தில்லை;

நாள்கள் எண்ணப்படுகின்றன, மீட்பர் வரவு தந் துள்ளார்.

மலைகளில் அமைதி நிலவுகிறது, பள்ளத்தாக்குகளில் மகிழ்ச்சியின் ஆரவாரம் நிகழ்கிறது,

ஏனெனில், அன்பாகவும் அறிவாகவும் உள்ள குழந்தை பற்றிக் கொள்ளப்படுகின்றான்;

நல் எண்ணமும் நட்பமைதியும் நிறைந்த பேரரசே உறுதிசெய்யப் படுத்தப்பட்டுள்ளது.

புனிதமானவர்களே, பாடுங்கள்!

தூய்மையானவர்களும் அமைதியானவர்களுமான உங்களின் குரல்கள் கேட்கப்படட்டும்!

உண்மை நிலை நாட்டப்பட்டது, நேர்மை ஆட்சி புரி, கிறது.

ஒவ்வொரு துயருக்கும் மகிழ்ச்சி உண்டு,