124 வெற்றிமேல் வெற்றி பெற...
ஏனெனில் தூய்மையிலிருந்து பிறக்கிறது உண்மை, அத்துடன், அதனைத் தேடிச் செல்பவர்கள் அளப்பரிய சிறப்பு வாய்ந்த வெளிச்சத்தையும் தேடுகிறார்கள்.
விடுதலைக்கான வழி திறக்கப்பட்டிருப்பதனால்,
கட்டுப்பட்டிருக்கும் நீ இப்போது வந்து விடுதலை பெறு,
அடிமையாக்கப்பட்டுள்ள நீ உேதவியற்றவன் நான்’ எனச் சொல்லாதே,
ஆம்! இரட்சிப்பு உன் கதவைத் தட்டுகிறது. நீ விடுதலையைத் தேர்ந்து எடுப்பாயா? அல்லது, அதிலும் பார்க்க கட்டுப்பட்டு இருப்பதையே விரும்புவாயா?
தூய்மையில் வாழ்வுரிமை உண்டு, அவளின் ஆலயத்திலே புரிந்து கொள்ளும் தன்மை குடி கொண்டிருக்கிறது,
களிப்பும் மகிழ்ச்சியும் அடைதியும் வாயில்காப்பவர் கனாக உள்ளனர்.
வா, வந்து உண்மைக்கு ஊக்கம் அளித்து பேசுவதைக் கேள்!
அதன் பிறகு, தூய்மையானதைச் செய். அப்படியே, தூய்மையானவற்றைச் செய்யும்போது மிக உயர்வான பேரின்பத்தை அறிவாய்.
உனக்குச் செயல்களில் மட்டும் தூய்மையைக் காண முடியாது,
மிக உயர்வான தூய்மை செயல்களில் மட்டுமே அடங்கி இருப்பதில்லை.