பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வெற்றி மேல் வெற்றி பெற ...

உங்களில்

தீவினையால் தாக்கப்பட்டு கறை படிந்தவர்கள் எவரோ;

என்றும் நிலைத்திருக்கும் அமைதியை எவர் தேடிச் செல்கின்றனரோ;

அவர்கள் வாருங்கள், தூய்மைக் கதவைத் தாண்டி உள்ளே செல்லுங்கள், புனிதத் தன்மையே தோழன் ஆகட்டும்.

சிந்தனைகளைத் தூய்மையாக்குங்கள்; உங்களது மனம் என்னும் உடைகளை வெண்மையாக வெளுத்துக் கொள்ளுங்கள்;

உங்கள் நெஞ்சத்தில் உள்ள கமுக்கமான இடங்களைத் துப்புரவு படுத்துங்கள்;

அது முடிவுற்றதும், உண்மை வந்து உங்களுடன் குடி யிருக்கும்;

அறிவே உமது விளக்கமாகவும் அறிவே உமது வழி காட்டியாகவும் இருக்கும்;

நேர்மை என்றென்றும் நிலைத்திருக்கும் உமது பாது காப்பாகவும்கூடத்

ஒளியும், மகிழ்ச்சியும், அமைதியும் என்றும் உம்மையே பின்பறறிக் கொள்ளும்.

ஊக்குவிப்பு-2

பணிவுடைமை

குற்றமில்லாப் பணிவிற்கே மாந்தர்களை நான் ஊக்கு விக்கின்றேன்.

பணிவிற்கான சிறப்பு வாய்ந்ததும், அன்புறவை ஊட்டு வதுமான நடைவழியை அவர்களுக்குக் காட்டுகின்றேன்.