128 வெற்றி மேல் வெற்றி பெற ...
உங்களில்
தீவினையால் தாக்கப்பட்டு கறை படிந்தவர்கள் எவரோ;
என்றும் நிலைத்திருக்கும் அமைதியை எவர் தேடிச் செல்கின்றனரோ;
அவர்கள் வாருங்கள், தூய்மைக் கதவைத் தாண்டி உள்ளே செல்லுங்கள், புனிதத் தன்மையே தோழன் ஆகட்டும்.
சிந்தனைகளைத் தூய்மையாக்குங்கள்; உங்களது மனம் என்னும் உடைகளை வெண்மையாக வெளுத்துக் கொள்ளுங்கள்;
உங்கள் நெஞ்சத்தில் உள்ள கமுக்கமான இடங்களைத் துப்புரவு படுத்துங்கள்;
அது முடிவுற்றதும், உண்மை வந்து உங்களுடன் குடி யிருக்கும்;
அறிவே உமது விளக்கமாகவும் அறிவே உமது வழி காட்டியாகவும் இருக்கும்;
நேர்மை என்றென்றும் நிலைத்திருக்கும் உமது பாது காப்பாகவும்கூடத்
ஒளியும், மகிழ்ச்சியும், அமைதியும் என்றும் உம்மையே பின்பறறிக் கொள்ளும்.
ஊக்குவிப்பு-2
பணிவுடைமை
குற்றமில்லாப் பணிவிற்கே மாந்தர்களை நான் ஊக்கு விக்கின்றேன்.
பணிவிற்கான சிறப்பு வாய்ந்ததும், அன்புறவை ஊட்டு வதுமான நடைவழியை அவர்களுக்குக் காட்டுகின்றேன்.