180 வெற்றிமேல் வெற்றி பெற ...
அவற்றை பூச்சியும் புழுதியும் அழித்துவிடும். உனது உடைமைகளினாலா? நாளை, மற்றொருவருக்கு அவை உரிமையாகலாம். உனது தனித் திறமையினாலா? அதன் பளபளப்பு மங்கிவிடும். உனது புகழினாலா? அது பனி போல் மறைந்துவிடும். உனது படிப்பினாலா? அது இப்போதுகூட எல்லையைத் தாண்டி விடுகிறது. உனது செயல்களினாலா? அது என்றுமே மறைந்துவிடும். அப்படி இவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடும் போது, எஞ்சி இருப்பவை யாவை?
மெய்யறிவும், உண்மையும், அன்புமே எஞ்சி இருப்பவை.
மேலும், மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் ஒளியூட்டுதல் நிலை நாட்டப்படுகிறது.
ஆனால், இவை பெருமையானவை என அறிவதற். கில்லை.
வீணானவனாலும் மதிகெட்டவனாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது, -
மேலும், தன்னலத்திற்கு உட்பட்டு இருப்பவனுக்கு அதன் அரும்புகழ் வெளிப்படுவதில்லை.
இருளினால் எதை வெளிக்காட்ட முடியும்? இருளில் நடப்பவன், எதைக் காண்பான்? தற்பெருமை கொண்டவர்கள் இருளினால் குருடாக்கப் படுகின்றனர்;