த.'கோவேந்தன் 181
வீணர்கள் தட்டுத் தடுமாறித் தங்கள் வழியைவிட்டு விடுகின்றனர்,
துயரமும் பாழ்நிலையுமே தன்னலத்தின் முடிவா கிறது.
பணிவை அறிவுறுத்தி ஒளியூட்டுதல் படிப்பைவிட மேலானது;
கீழ்ப்படிதலின் ஆற்றல் வெற்றி ஈட்டிய பலரின் வன்மையைவிட அதிகமானது,
எவன் தனது மனத்தைப் பணிவுள்ளதாக ஆக்கு கிறானோ அவன் தன்னைத்தான்ே ஒரு பாறையின்மேல் நிலை நாட்டுகிறான்.
தற்பெருமை வாய்ந்தவர்கள் எப்படி நிலைத்து நிற் பார்கள்?
தங்களின் வலுவின்மையால் அவர்கள் விழ்ச்சியடை கிறார்கள்.
வீணர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடிகிறது: தாங்கிக்கொள்ள பிடிப்பு இல்லாத நாணலைப் போன்ற வர்கள் அவர்கள்.
தன்னலத்தில் நாட்டங் கொண்டவர்கள் எப்படிச் சிறப்பு அடைவார்கள்?
அவர்கள் ஊதிவிடப்பட்ட வெற்று விதைகளுக்கு நிலம் இல்லாதது போன்றவர்கள்.
பணிவெனும் ஆடையை அணியுங்கள், நீங்கள் வீழ்ச்சி அடைய மாட்டீர்கள்; -
உங்கள் உள்ளத்தை மென்மையானதாக்குங்கள், மலை போல் எதையும் தாங்கிக் கொள்வீர்கள்;
தன்னலத்தை அகற்றி விடுங்கள், உங்களின் தொழில்கள், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல் செழிப்பாக வளர்ச்சி பெறும்.