பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வெற்றி மேல் வெற்றி பெற.

திமிர்பிடித்தவர்கள் தங்களை அரசர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்,

ஆனால், அவர்கள் அடிமைகளைவிடத் தாழ்ந்த வர்கள்,

தற்பெருமை கொண்டவர்கள் எவ்வளவு இலகுவாகப் புண்படுத்தப் படுகின்றனர்,

ஒவ்வொரு நாளும் துன்பத்தை நுகர்கின்றனர்; வினர்கள் அடிக்கடி துன்பப்படுத்தப்படுகின்றனர். அழுகையும் துயரமுமே அவர்களின் பங்கு, ஊழ்வினை;

தன்னலம் உடையவர்கள் எப்படி உடனுக்குடன் இழப்புகளால துன்பப்படுகிறார்கள்,

ஒவ்வொரு நாளும் தாங்கள் இழந்தவற்றிற்க்காக அழு கின்றனர்,

பணிவில் நோக்காடு இல்லை, கீழ்ப்படிதல் துயரத்தை ஒழிக்கிறது. தூய்மையான நெஞ்சத்தையுடையவர்களுக்கு துயர்பட் வேண்டிய இழப்புகளில்லை.

ஒரு மாந்தன், எதை தனக்கென உறுதியாக வைத்துக் கொள்கிறான்?

எதைத் தாங்கிக் கொள்கிறான்?

அழிவற்ற நிலை எங்கே குடியிருக்கிறது?

உலகின் பொருள்கள் எல்லாம் அழிந்துகொண்டே போகின்றன,

அவற்றைப் பிடித்து வைத்திருக்க யாராலும் முடியாது;

உடலானது, மீண்டும் காணப்படாதவாறு அழிந்து போகிறது;