பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 109

உனக்குரிய உள்ளத்திலே அவர் குடியிருக்கின்றார்;

உன்னிடமிருந்து அவர் மற்ைந்திருக்கவில்லை, ஆனால் உன்னாலேயே மறைக்கப்பட்டிருக்கிறார்.

உன் மனத்தின் குரலே அந்த ஆசான். வெளிச்சத்தின் உட்புறத்திலும், அமைதியின் அடித்தளத்திலும் அவர் உள்ளார். உற்றுப் பாருங்கன் ஆசானின் குடியிருக்கும் இடத் தைக் காண்பிக்கிறேன்.

அது தூய்மையாக்கப்பட்ட உள்ளம். தன்னலப் பிணைப்புகளைத் , தகர்த்தவர்கள், ஆசைகளை வெட்டி வீழ்த்தியவர்கள், அலைவற்ற வெற்றிகொள்ளப்பட்ட அமைதியான மனம் படைத்தவர்கள்,

உளைவற்றதும் மென்மையானதும் அமைதி மனத்தை உடையவர்,

ஆசானின் முன்னே நுழைந்தவர்கள் ஆகிறார்கள்;

அவர்களுக்கே ஆசானின் நற்புகழும் வெளிப்படு கிறது!

ஒ; கதறி அழுதும் எவ்வகை விடையும்பெறாதவர்களே!

ஒ. அலைந்து திரிந்தும் ஆறுதல் அடையாதவர்களே!

ஒ, தேடியும் வெளிச்சத்தைக் காணாதவர்களே!

உங்களது, சோர்வுற்ற உள்ளத்துடன் வாருங்கள்;

உங்களது குருட்டு மனப்பான்மையுடன் இங்கு வாருங்

கள்,

வந்து, புனிதமான அறிவுரைகளைக் கேளுங்கள்,

அவற்றைக் கேட்டபின், நிறைவும் ஆறுதலும் அடை புங்கள்,