பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுறுத்தல்

பொது அறம

பணிவானவர்க்கும், உண்மையானவருக்கும் பணிவை யும் உண்மையைத் தேடிக் கொண்டிருப்பவர்க்கும்

மிக உயர்வான, தன்னிகரற்ற பொது அறக்கட்டளை. அதுவே அந்த நல்லவரின் கட்டளையும், தீமை எனப்படுவதைச் சிந்திக்காதே; தீமை எனப்படுவதைச் சொல்லாதே; தீமை எனப்படுவதைச் செய்யாதே; எது நல்லதோ, அதையே சிந்தனை செய், எது நல்லதோ அதையே சொல்; எது நல்லதோ அதையே செய்.

அப்போது அந்த அறக்கட்டளைகளை உன்னால் அறிய முடியும்;

வேறு எந்த வழியிலும் அதனை அறிய முடியாது. அந்த அறக்கட்டளைகளைப்பற்றிய அறிவு நெஞ்சத்தை மகிழ்விக்கிறது.

மனத்தை அது களிப்பினால் நிறைக்கிறது; எல்லாத் துயரங்களையும் அழிக்கிறது, போக்குகிறது. அந்த அறக்கட்டளையை அறிந்தவனை அல்லல்கள் அவனை விட்டு நீங்குகின்றன.

தீயவினையும் துயரமும் துயர்ப்படுத்தினாலும் அவனை விட்டு விலகுகின்றன.

அவன் எங்குச் சென்றாலும், அவனை அமைதி பின்தொடர்கிறது.

அந்த அறக்கட்டளையை அறிந்து உணர்ந்தவன் மகிழ்ச்சி அடைகிறான்.