பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வெற்றி மேல் வெற்றி பெற.

கனவு காண்பவரின் வழியோ திடமில்லாதது, நோக் காடு மிக்கது;

இன்பமும் திகிலும் அவனைத் துன்புறுத்துகின்றன.

தான்் எங்கே நிற்கிறான் என்பது அவனுக்கே தெரி வதில்லை.

தன்னை அவன் கட்டுப்படுத்துவதில்லை. அதனால், மெய்ம்மையில்லாதவற்றின் பரிவில், தயவில் உள்ளவனா கிறான்.

ஒ, உறங்கிக் கொண்டிருப்பவனே! தன்னலக் கனவு களை விட்டொழித்து விடு.

எழுந்திரு காலை வேளைக்கு உனது கண்களை த் திற உனது புனிதத் தன்மையை நீ அறிந்து உணர்வாய்.

பொய்த் தோற்றமான பாதையில் நடந்துசெல்பவனை, அவனின் நிழல்கள் சுற்றி வருகின்றன.

அவன் பொருளை அறிந்து உணர்வதில்லை.

நீர்க்குமிழிகளைப் பிடிப்பதனால், அவன் உறக்கத்தி. னாலும் ஏமாற்றத்தினாலும் சுடுபட்டுத் தீக்காயங்களுக்கு உள்ளாகிறான்.

அழியும் தன்மையுடையவற்றைப் பற்றிக் கொள்வத னால் அவன் புலம்புகிறான்.

மறைந்து போகும் தன்மை உடையவர்களைப் பின் தொடர்வதனால் அவன் ஆறுதல் இன்மையால் அல்லல் படுகிறான்.

பொய்த் தோற்றத்திற்கான பாதை வழியையும், அழிந்து போகும் உமது தன் ன ல வழியையும் விட்டுவிடு, e

அப்போது, அழிவற்ற உண்மையை அறிவாய்;