14 வெற்றிமேல் வெற்றி பெற ...
ஆறுதல் அளிப்பவராக உண்மை
1.
நிலையான ஆறுதலை அளிப்பது உண்மை பற்றிய அறிவே.
மற்றைய எல்லாமே தோல்வியுறும்போது, உண்மை தோல்வியடைவதில்லை.
எவ்வித உதவியுமின்றி நெஞ்சம் தனித்தே துன்பப் படும்போது உலகமே பாதுகாப்பு அளிக்க முன்வராத சூழ்நிலையில், உண்மையே அமைதியான புகலிடத்தையும் நிறைவான ஆறுதலையும் அளிக்கிறது.
வாழ்க்கையில் ஆதரவு கொள்வதற்கு எத்தனையோ உள்ளன;
அவற்றின் பாதையோ இடையூறுகள் பலவற்றி னால் சூழப்பட்டுள்ளது.
ஆனால் ஆதரவு அளிப்பவற்றைவிட உண்மையே பெருமை மிக்கது,
எல்லா இடையூறுகளையும் போக்குதற்கு முதன்மை பெற்றது.
நாம் தாங்க வேண்டிய சுமைகளைக் குறைக்கிறது, உண்மை;
நமது வழிப்பாதையைக் களிப்பின் ஒளிக்கதிர்களால் வெளிச்சமாக்குகிறது.
அன்பு செலுத்தப்பட்டவர்கள் இவ்வுலகை விட்டு மறை கின்றனர், நண்பர்கள் ஏமாற்றுகின்றனர்;
நாம் உரிமை கொண்டாடும் அனைத்துமே மறைந்து. போகின்றன.