த. கோவேத்தன் 璽齡
அப்போ, நமக்கு நலம் அளிக்கும் குரல் எங்கே உள்ளது?
ஆறுதல் பற்றிய கமுக்கப் பேச்சு எங்கே?
நல வாழ்வின்றி இருப்பவர்களுக்கு நல வாழ்வை: அளிப்பதும், கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் உண்மையே.
உண்மை நம்மைவிட்டு போய்விடுவதோ ஏமாற்றுவதோ அன்றி மறைவதோ இல்லை.
நிலையான சிர் அமைதிக்குத் தேற்றுதல் அளிப்பது உண்மையே.
இடர்கள் எல்லோருக்குமே நிகழ்பவை.
அவற்றிலிருந்து நல்ல அறிவாளிகளால்கூட தப்பிவிட
முடியாது. r
ஆனால், என்றும் நிலைத்திருக்கும் அந்த நல்லவரின் உறுதியானதும் பாதுகாப்பானதுமான புகலிடம் அறிவாளி களிடம் உண்டு.
அவர்களுக்கு நலம் அளிப்பவர் ஒருவர் உள்ளார்; உண்மையைவிட மிக உயர்வானவர்;
துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கருவியை அகற்றி, இடர்கள் எனும் முகிற் கூட்டங்களைக் கலைந்து. விடச் செய்கிறார்.
இருள் புன்மையானவர்கள் மேல் படிந்துகொள்வது. போல் புனிதமானவர்கள் மேலும் படிகிறது;
ஆனால், புனிதமானவர்கள் அச்சப்படுவது இல்லை;
ஏனெனில் உண்மை உறுதி அளிக்கும் ஒளிச்சுடர் களினால் இருளைப் போக்கி வெளிச்சத்தைக் கொடுக் கிறது. -
குற்றமற்றவர்களின் துயில் இனிமையானது.