பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேத்தன் 璽齡

அப்போ, நமக்கு நலம் அளிக்கும் குரல் எங்கே உள்ளது?

ஆறுதல் பற்றிய கமுக்கப் பேச்சு எங்கே?

நல வாழ்வின்றி இருப்பவர்களுக்கு நல வாழ்வை: அளிப்பதும், கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் உண்மையே.

உண்மை நம்மைவிட்டு போய்விடுவதோ ஏமாற்றுவதோ அன்றி மறைவதோ இல்லை.

நிலையான சிர் அமைதிக்குத் தேற்றுதல் அளிப்பது உண்மையே.

இடர்கள் எல்லோருக்குமே நிகழ்பவை.

அவற்றிலிருந்து நல்ல அறிவாளிகளால்கூட தப்பிவிட

முடியாது. r

ஆனால், என்றும் நிலைத்திருக்கும் அந்த நல்லவரின் உறுதியானதும் பாதுகாப்பானதுமான புகலிடம் அறிவாளி களிடம் உண்டு.

அவர்களுக்கு நலம் அளிப்பவர் ஒருவர் உள்ளார்; உண்மையைவிட மிக உயர்வானவர்;

துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கருவியை அகற்றி, இடர்கள் எனும் முகிற் கூட்டங்களைக் கலைந்து. விடச் செய்கிறார்.

இருள் புன்மையானவர்கள் மேல் படிந்துகொள்வது. போல் புனிதமானவர்கள் மேலும் படிகிறது;

ஆனால், புனிதமானவர்கள் அச்சப்படுவது இல்லை;

ஏனெனில் உண்மை உறுதி அளிக்கும் ஒளிச்சுடர் களினால் இருளைப் போக்கி வெளிச்சத்தைக் கொடுக் கிறது. -

குற்றமற்றவர்களின் துயில் இனிமையானது.