பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வெற்றிமேல் வெற்றி பெற.

அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ள உண்மையின் மேல் மட்டத்தில் அவர்கள் ஓய்வு கொள்கிறார்கள்.

அறிவாளிக்கும் அறிவிலிக்கும் உள்ள பாதைகளுக்குப் பகல் வெளிச்சம் அளிக்கிறது;

ஆனால் அறிவிலிகளோ தவறெனும் இருளினால் மூடப் படுகினறனர்;

அவர்கள், தவறுகளினால் தடுக்கி விழுந்து காயமுறு கின்றனர்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் யாருமில்லை. ஆனால், அறிவாளிகள் உண்மையின் வெளிச்சத்தில் நடந்து போகிறார்கள்.

அதனால், தடுக்கி விழும்போதெல்லாம் தூக்கி விடப் படுகிறார்கள்;

ஆம்! காயங்கள் ஆற்றப்பட்டு தலம் அடைகிறார்கள். உண்மை பற்றிய அறிவு பெற்றுள்ளவர்க்கு அமைதியில் நிறைவு ஏற்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களினால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை;

உலக வாழ்வினால் ஏற்படும் கடமைகளின் பொறுப்பு களிலிருந்தும் பாதுகாப்பிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப் பட்டவர்கள் அல்லர், -

வெளியே உள்ண் தீய பகைவர்களினால் தாக்கப்பட முடியாதவர்களும் அல்லர்;

ஆனால், அவர்களின் நெஞ்சத்தில் அமைதி நிலைக் கிறது;

அவர்களின் உள்ளங்கள் அமைதியை அணிக்கும் பெருமை வாய்ந்தவரைப் பின் தொடர்கின்றன.