பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 17

2

இவ்வுலக வாழ்வின் நலன்கனை நாடுபவர்களுக்கு நலன் அளிக்க யாருமில்லை.

ஆனால், அப்படி நலன்களை விட்டு அவர்கள் உண்மையின் உலகிற்கு விரைந்தார்களானால், ஆறுதல். எனும் இனிய பரிசை பெறுவார்கள்.

மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் இடம் அளிப்பது இவ்வுலகம்.

மகிழ்ச்சியின் அமைதியின் உறைவிடம்தான்் உண்மை, எவர் உண்மைக்காக உலகிலுள்ள தங்களது தூண்டுதல் களையும் நிறைவின்மைகளையும் கைவிட்டு விடுகிறார். களோ அவர்கள், ஏமாற்றாத தோழனையும் துணைவனை

யும், என்றும் நிலைத்திருப்பவரையுமே கண்டு கொள் வார்கள்.

உலகத்தில் இன்னல்கள் உள்ளன. அந்தோ, அல்லலும் அகவருத்தமும் நிறைந்துள்ளன.

ஆனால், உண்மை சலனமற்றது;

அது அல்லலைக் குறைத்து அக வருத்தங்களை அமைதிப்படுத்துகிறது.

உலகின் புலம்பல்களைக் கேளுங்கள்!

சூரைக் காற்றைவிட மிகவும் கொடுமையானது;

ஆழம் மிக்க ஆழியின் அலை ஓசையை விட ஆர்ப்புடையது.

உண்மை ஒன்று மட்டுமே பேராசையெனும் சூரைக் காற்றையும் துயரம் எனும் புயலையும் நிறுத்தி அமைதிப் படுத்த வல்லது.