பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 19

எல்லோரும் உண்மைக்கு வாருங்கள்!

உலக இன்ப துன்பங்களுக்கு மேலானது உண்மை. வாழ்வில் உயர்வுறுங்கள்;

ஆறுதல் கொள்ளுங்கள்;

குணம் கொள்ளுங்கள்;

ஆதரிக்கப்பட்டு இன்னமைதி அடைவீர்கள்.

3

எவன் தன்னலப் பற்றுக்காகவும் தீவினைக்காகவும் ஏமாற்றங்களைப் பற்றிக் கொண்டு இருக்கிறானோ;

அவனால் உண்மையைக் கண்டுகொள்ள முடியாது. உண்மையின் ஆறுதல்களை அவனால் பெற்றுக் கொள்ள முடியாது.

மேன்மை குறைவாக்கும், மாசுபடுத்தும் எல்லாமே விட்டொழிக்கப்பட வேண்டும்.

தன்னலத்தை ஒழிக்காது இருந்தால் உண்மையைக் காண முடியாது.

எவர் பொய் சொல்கிறாரோ ஏமாற்றுகிறாரோ; எவர் வெறுக்கிறாரோ பொறாமைப்படுகிறாரோ; எவர் இச்சை கொள்கிறாரோ பேராசைப்படுகிறாரோ; எவர் தங்களின் இன்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொள்கிறாரோ;

எவரின் குறிக்கோள் தன னலம் மிக்கதாகவும் அவர்கள் செய்யும் 'எல்லாவற்றிலும் . தன்னலத்தின் புகழே உள்ளதோ, அவர்களுக்கு