பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வெற்றிமேல் வெற்றி பெற...

இருளெனும் திரையினால் மறைக்கப்பட்டிருக்கும் உண்மையிலிருந்து, தவறெனும் வலுவான திரையிலிருந்: தும் உண்மையின் ஆறுதல் தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஏனெனில், அவர்கள் தன்னலத்தை நாடிச் செல்: கிறார்கன்ே தவிர உண்மைக்காக இல்லை.

எவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக் கிறாரோ;

எவர் மனிதரை விரும்பி அவர்களின் வெற்றிகளினால் மகிழ்ச்சி அடைகின்றாரோ;

எவர் தூய்மையாகவும் தாராள மனம் உடையவரா கவும் இருக்கின்றாரோ;

எவர் தாம் செய்யும் எல்லாவற்றிலும் மற்றவர்க்ளின் தன்மையையும் கருதுகின்றாரோத

அவர்களுக்கே உண்மை வெளிப்படுகிறது. அவர்கள் நல்லவற்றுடன் நேருக்கு நேராக நின்று உண்மையின் ஆறுதல்களைப் பெறுகின்றனர்.

மூடர்கள், சிற்றின்ப உணர்வுகளினால் அடையும் நிறைவை நாடிச் செல்கின்றனர்.

உலகத்தின் புகழ்ச்சிகளில் வீனர்கள் மகிழ்ச்சி அடை கின்றனர்.

ஒருவன் துன் பத்திற்கும் வெறுமைக்கும் இழுத்துச் செல்லப்படுகின்றான்;

மற்றவன் ஏமாற்றத்திற்கும் மனத்தைப் புண்படுத்தவும் கூட்டிச் செல்லப்படுகிறான்.

அறிவுள்ளவனோ உண்மையின் களிப்பில் உறுதி யாகவே நிற்கின்றான்.

பணிவானவர்களுக்கு எந்தவொரு படுகுழியும் எதிர் கொள்வதில்லை.