பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 21

அமைதி நெறியில் அவர்கள் மிக விரைவாகவும் உறுதி யுடனும் நடந்துசெல்கின்றனர்.

உலகத்துடன் நாம் கொண்டிருந்த வலுவான இணைப்பை நாங்கள் நீக்கி உள்ளோம்.

அதன் பலவகையான இன்பங்களும் ஒதுக்கி வைக்கப் பட்டு முற்றாகவே கைவிடப்பட்டுள்ளன.

உலகின் தேவைகளை நாம் செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம், ஆனால் அவற்றின் வடிவங்கள்மேல் நாம் இனிமேல் தங்கியிருப்பதில்லை.

பேராசைகளினால் பெறப்படும் நிறைவை நாடி இனி மேல் போவதில்லை.

எங்கள் நெஞ்சங்கள் எல்லோரின் நன்மையிலும் பதிந்துவிட்டது.

அவ்வாறே, சமயத்தினால் ஏற்படும் நிலையான இன்பத்தை நாம் கண்டு கொண்டோம்.

அமைதி அளிக்கும் நம்பிக்கையையும் ஆழ்ந்த மகிழ்ச்சி யையும் அறிந்து கொண்டோம்.

பற்றார்வமுள்ள ஒருவரும், எங்கும் நிறைந்து எமக்கு ஏந்துகள் அளிப்பவருமான வரிடமே தஞ்சம் புகுந்து கொண்டுள்ளோம்;

அவரே புனித ஆன்மாவும்கூட. அவரின் மிக உயர்வான இருப்பிடத்தில் நாம் தஞ்சம் அடைந்துள்ளோம்.

எவ்வித ஆசையாலும் தூண்டப்பட்டு, உலகின் கொந்தளிப்பான பாதைகளுக்கு மீண்டும் எங்களை இழுத்துச் செல்வதற்கு எவ்விதக் கவர்ச்சித் தூண்டுதலா லும் முடியாது;

ஏனெனில் எமது புகலிடமே உண்மையான பாதுகாப் பான புகலிடம்.

B سفیه (6