22 வெற்றிமேல் வெற்றி பெற.
4
தன்னலப்பாதையே துன்பப் பாதையாகிறது; ஆனால் உண்மை, களைப்புற்று இருப்பவர்களின் களைப்பைப் போக்கிக் கொடுமைக்கு உள்ளவர்களை விடுவிக்கின்றது.
அங்கே, துன்புற்றவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.
உலகின் துன்பங்களினால் அவர்களுக்கு ஏற்பட்ட புண்களைக் குணப்படுத்தித் தடுக்கை அளிக்கப்படுகிறது;
விடுதலை பெறும் இடம் ஒன்று உள்ளது, அங்கே தீவினைச் சங்கிலிகள் அறுத்து எறியப்படுகின்றன;
அங்கே அழுகை இல்லை, அதனால் அழுகுரல்கள் கேட்பதில்லை.
நண்பர்கள் இல்லாதவர்களுக்கு ஒரு தண்பன் உண்டு,
ஆறுதல் அற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கவல்ல ஒருவர் இருக்கினறார்,
வாருங்கள்! வந்து பாருங்கள்; அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உண்மை எல்லோரின் தேவைகளையும் எதிர் கொள்கிறது, எல்லோரையும் ஏற்றுக் கொள்ள அணியமாய் இருக்கிறது.
நேர்மையானவர்கள் அங்கே தங்கிவிடுகிறார்கள்; மகிழ்ச்சியின் முழுமையை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
நேர்மை அறறவர்கள் கூட வரட்டும்.