பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 28

ஆம் தீவினைகளினால் கனைப்படைந்து சோர்வுற்று இருப்பவர்களும் வரட்டும்;

மேலும், தன்னலத்தினால் ஏற்படும் துயரங்களைத் தாங்கி, அதனால் அல்லலுற்றவர்கள் கூடச் சேர்ந்து மகிழ்ச்சியை அடையட்டும்;

வீடு இல்லாதவர்களுக்கு ஒரு வீடும், நாடு கடத்தப்பட் டவர்களுக்கும் ஒரு நாடும உண்டு.

அலைந்து திரியும் நாடோடிகளுக்கு ஒரு வழியும், 5了血讯 களுக்கு நகரமும் உண்டு.

வழிகளிலிருந்து எவன் திரும்புகிறானோ, அவன் نه به திரும்பி வரட்டும்.

மனக்குழம்பத்திலிருந்து அமைதியையும், துயரத்தி லிருந்து மகிழ்ச்சியையும் அளிக்கின்றது உண்மை.

அது, தன்னலம் உள்ளவர்களை நல்லவர்களின் வழிக்கும், தீயவர்களைப் புனிதமானவர்களின் வழிக்கும் காட்டி விடுகின்றது.

அதன் எழுச்சியே நேர்மையானவர்களின் செயல்.

பணிவு உள்ளவர்க்கும் திறமை வாய்ந்தவர்க்கும் அமைதிப் பொன்முடியை அது சூட்டுகிறது.

ஆர்வம் உள்ளவர்க்கும் நன்றி உள்ளவர்க்கும் அது ஆறுதலை அளிக்கிறது.

நான், உண்மையிடம் புகலடைகிறேன்.

ஆம்! நல்லவர்களின் உணர்வில், நல்லவர்களின் அறி வாற்றலில், நல்லவர்களின் செயல்களில் நிேலையாகவே நான் இருக்கின்றேன்;

அச்சம் அக்ற்றி ஆறுதல் கொண்டுள்ளேன்.