24 வெற்றி மேல வெற்றி பெற ...
தீய எண்ணங்கள் இல்லாமையினால், பகைமை அற்று விட்டது.
தீயவற்றின் மேலான இச்சை, இருளின் அடியில சிறை வைக்கப்பட்டுள்ளது;
உண்மையின் தனிச்சிறப்பு எல்லாவற்றினும் மேன்மை பெற்ற வெளிச்சத்தில் செல்வதற்கு அந்த இச்சைக்கு வழியேயில்லை.
அதன் செருக்கு உடைந்து கரைகிறது. தற்பெருமை உருகிப் பணிபோல் கரைந்தது.
நான், எனது முகத்தைச் சீர்மையான நல்லவனையே நோக்கியும், எனது பாதங்களை மாசு அற்ற வழியிலும் பதித்து உள்ளேன்;
இதனால் நான் தேற்றப்படுகிறேன்.
உண்மையிடம் புகலடைந்ததால் நான் பலம் மிக்கவ னாகவும் ஆறுதல் கொண்டவனாகவும உள்ளேன.
உண்மையே நம் மீட்பர்
l
உண்மையே எங்கள் மீட்பர்!
உண்மை எமது நெஞ்சத்தைத் தூய்மைப்படுத்தி புனித மான அன்பின் புகழ்மிக்க பரிசினை எமக்குப் பாதுகாப் புடன் வழங்குகிறது.
தன்னலத்தினால் மீட்சியில்லை.
தன்னலம் தீவினைப் பாண்டம், படுத்துயரைப் பாது காக்கும் பெட்டகம்: