த. கோவேந்தன். 27
இவையே உண்மையின் தேவ தூதர்கள்;
இவற்றைப் பெற்றுள்ளவர்கள்தான்் மீட்கப்பட்ட வர்கள்;
இவற்றின் உறைவிடமே அமைதி.
2
உண்மையே உலகின் பாதுகாவலர். இன்னொரு காப்பாளா உலகில் இல்லை. உண்மையுடன் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்கு இடமே இல்லை;
தன் நலத்தை விட்டு விடு’ என்று அது கூறுகிறது. நம்மிடமுள்ள அனைத்தையும் உண்மைக்கு உவந்து அளிக்கும்போதுதான்், அது நமது மீட்டிராகின்றது.
தன்னலம் காப்பாற்றப்பட முடியாதது; அது விட்டொழிக்க வேண்டியது. எந்த இருளில் அது உருவானதோ எதற்கு அது உரியதோ அதே இருளில் அதனை விட்டுவிட வேண்டும்.
எல்லாவிதமான தன்னலன்களையும் எவர் விட்டொ ழித்து முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே மீட்சிக்கான ஒளி காட்சி அளிக்கிறது.
எவர் திரும்பி வராமல் முன்னே சென்று மீட்பரின் முன்னிலைக்குள் நுழைகிறார்களோ, அவர்களே அந்த மீட்பரின் சிர்த்திமிக்க அங்கியை அணிகிறார்கள்.
மீட்கப்பட்டவரின் புகழை யாரால் அறிய முடியும்? மீட்கப்பட்டவர்கள் அதைக் கவனித்துக் கொள் கிறார்கள்;