34 வெற்றிமேல் வெற்றி பெற...
ஆனால், மீட்கப்பட்டவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சிப் பாதையிலே போய்க் கொண்டிருப்பார்கள்;
பலமும் மகிழ்ச்சியும் அவர்களின் நண்பர்கள்;
நல்லவர்களிடமிருந்து பிரிந்து செல்லாமல் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியின் இல்லத்திலேயே வாழ்கின்றனர்.
அப்படியானால், எவற்றிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டுள்ளோம்?
எதிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டோம், எங்கே உள்ளது எங்கள் பாதுகாப்பு என்னும் பேரின்ப விடு?
தாங்கள், தன்னலத்திலிருந்தும் இச்சைகளிலிருந்தும் காக்கப்பட்டுள்ளோம்,
தீவினையிலிருந்தும் துன்பத்திலிருந்தும்,
பழிகேடான நிலையிலிருந்தும் ஆறுதல் இன்மை யிலிருந்தும்,
நாம் மீட்கப்பட்டுள்ளோம்.
பேராசையிலிருந்தும் வெறுப்பிலிருந்தும் காப்பாற்றப்
பட்டுள்னோம்,
செருக்கிலிருந்தும் பகட்டிலிருந்தும்,
பேராசையிலிருந்தும் பொறாமையிலிருந்தும் இழுத்து, வரம்பட்டோம்.
உண்மையின் பயிற்சியினால்,
உண்மை பற்றிய அறிவினால்,
உண்மையின் ஆற்றலினால் நாம் காப்பாற்றப்பட்டு: உள்ளோம்.