த. கோவேந்தன் 47
உண்மை மகிழ்ச்சியின் இருப்பிடம், நிலையான பாது காப்பு அளிப்பது.
உண்மையில் இதற்குமேல் ஐயமும் உறுதியின் மையும் இல்லை.
அங்கு இடரற்ற பாதுகாப்பு உள்ளது;
அங்கு நேரான பாதையும் அமைதியான ஆறுதலும் உண்டு.
2
நேர்மையானவர்கள், உண்மையின் பாதுகாப்பை அறிந்து கொள்வார்கள்.
அவர்களின் மனங்கள் விடுதலை பெற்றவை, நெஞ் சங்கள் மகிழ்ச்சி நிறைந்தவை.
வீணான மன்னிப்புகளுக்கும் புரட்டுப் பேச்சுகளுக்கும் அவர்கள் இடம் அளிப்பதில்லை.
தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று அவர்கள் திட்டமிடுவதில்லை;
அவர்களின் செயல்களே வெல்ல முடியாத காவ லர்கள்;
அவர்களின் வாழ்வே சான்று, அதனால் அவர்கள் வெட்கப்படுவதில்லை.
நேர்மை அற்றவர்களோ, வெட்கத்தாலும் குழப்பத் :ாலும் தோற்கடிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அதனை மறைக்க முயல்கிறார்கள், ஆனால் அவர்களால் முடியாது;
அவர்களிடம், மறைத்து வைப்பதற்கான இடமில்லை;