50 வெற்றி மேல் வெற்றி பெற...
துன்பத்தை ஏற்படுத்தும் கொடுக்கு அழிந்து போகிறது’ அவற்றின் தீங்குகள் கலைக்கப் படுகின்றன.
முழுமை பெற்றவர்களின் அமைதியை என்றும் அழித்து விட முடியாது.
3
உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள் உள்ளிருந்தே பாதுகாக்கப்படுகின்றனர்.
நிறைவு பெற்றவர்கள் உண்மையாகவே நன்மை பினால் காக்கப்படுகின்றனர்;
அவர்கள் நன்மையின் அறமுறைக் கட்டளையினால் உயர்த்தப்படுகின்றனர்.
உண்மையின் அறிவைக் கொண்டு அவர்கள் உயர்த்தப் படுகின்றனர்.
அவர்கள் நிமிர்ந்து நிற்கின்றனர், விழுந்து விடுவ தில்லை.
மனிதனால் அது முழுவதையும் மாற்றிவிட முடியாது. தவறு மறைந்து விடுகிறது, ஆனால் உண்மை தொடர்ந்து நிலைக்கிறது.
மனிதர்கள் விழுந்து விடுகிறார்கள், ஆனால் உண்மை மாற்றம் அடையாது.
அது தொடர்ந்து நிலைக்கிறது. அது நிலையானது, அழிந்துவிட முடியாதது. இங்குதான்் அறிவர்களின் புகலிடம் உள்ளது; இங்குதான்் அரும்பெரும் தூய்மையானவர்களின் பாதுகாப்பு உள்ளது;