பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 51

இங்குதான்் முழுமையானவர்களின் மகிழ்ச்சியுள்ளதுஉண்மையுடன் ஒன்றாகவே இருந்து அவர்கள் நிலையான அமைதிக்கு வந்து விட்டார்கள்.

எவன் உண்மையுடன் தான்ும் ஒன்றாகிறானோ, அவன் உண்மையை எதிரொளிக்கின்றான்

அவன் மனம் தளராதவன், அச்சமில்லாதவன், மேன்மையானவன்.

அவன் மாற்றம் அடைவதில்லை, ஆனால் என்றும் அவன் உண்மையாகவே இருப்பான்.

ஆயும்போது, அவன் தடுமாற்றமடைவதில்லை; கடுமையாகத் தாக்கப்படும்போது அவன் விடுவ தில்லை.

தூய்மையிலும் அமைதியிலும் நிலைபெற்று, பரிவிரக் கத்திலும் பலத்திலும் திடமாக்கப்படுகின்றான். தீவினைகளுக்காக யார் புலம்புகிறார்கள்? விடுதலைக்காக யார் தட்டுத்தடுமாறி தவிக்கிறார்கள்? அவன் தன்னைத்தான்ே தூய்மை ஆக்கட்டும். நிலைப்பதற்காக யார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்? அவன் தன்னைத்தான்ே தூய்மையாக்கட்டும்; உண்மைக்கு அவன் வரட்டும்; நல்லவற்றைப் பயிற்சி கொள்வதிலே அவன் அமைதி கானட்டும்.

பொருள்கள் யாவும் நிலை அற்றவை. அவற்றிற்கு நிலையான பாதுகாப்பில்லை. உண்மையே நிலையானது. எல்லா மாற்றங்கள் ஊடாகவும் அதற்கான பாது காப்பை உண்மையே நிலைபெற வைக்கிறது.