பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳6 வெற்றி மேல் வெற்றி பெற.

மாணவன் : நீங்கள் யார், எனக்கு உறுதி அளிக்கரீ

ஆசான் : நான் தான்் உண்மையின் ஆவி.

மாணவன் : ஒ ஆண்டகையே! ஓ! உண்மையின் உயிர்ப்பேt இதற்கு முன்னர் நீங்கள் ஏன் என்னிடம் வர வில்லை? இவ்வளவு நீண்ட காலமாக ஏன என்னைத் தனிமையில் விட்டிர்கள்?

ஆசான் : இதுவரை நீ தனிமையில் இருக்கவில்லை;

செருக்கே உதுை தோழன், அந்தச்செருக்கே உன்னை நிறைவுப்படுத்தியது.

எங்கே செருக்கு குடியிருக்கிறதோ, அங்கே நான் வருவதில்லை;

அதன் தற்புகழ்ச்சிகளை எவன் கேட்கிறானோ, அவனால் என்னுடைய குரலைக் கேட்க முடியாது.

என்னுடைய வடிவத்தைக் காண முடியாதவாறு உனது தற்புகழ்ச்சி உன்னைக் குருடாக்கி விட்டது;

தன்னல வெற்றிக் களிப்பு உன்னைச் செவிடாக்கி விட்டது;

அதனால், நான் உன்னை அழைத்தபோது உன்னால் அந்த அழைப்பைக் கேட்க முடியவில்லை; தன்னலத்துடன் தேடினாய், அதனால் நீ தனியனாகி விட்டாய்,

அதனால் என்னிடம் வருவதற்கான நெறி உனக்கு மறைக்கப்பட்டது.

ஆனால், இப்போது செருக்கினை நீ அகற்றிக் கொண்டதால், உன்னால என்னைக் காணவும் என் குரலைக் கேட்கவும் முடிந்தது.