岳6 வெற்றி மேல் வெற்றி பெற.
மாணவன் : நீங்கள் யார், எனக்கு உறுதி அளிக்கரீ
ஆசான் : நான் தான்் உண்மையின் ஆவி.
மாணவன் : ஒ ஆண்டகையே! ஓ! உண்மையின் உயிர்ப்பேt இதற்கு முன்னர் நீங்கள் ஏன் என்னிடம் வர வில்லை? இவ்வளவு நீண்ட காலமாக ஏன என்னைத் தனிமையில் விட்டிர்கள்?
ஆசான் : இதுவரை நீ தனிமையில் இருக்கவில்லை;
செருக்கே உதுை தோழன், அந்தச்செருக்கே உன்னை நிறைவுப்படுத்தியது.
எங்கே செருக்கு குடியிருக்கிறதோ, அங்கே நான் வருவதில்லை;
அதன் தற்புகழ்ச்சிகளை எவன் கேட்கிறானோ, அவனால் என்னுடைய குரலைக் கேட்க முடியாது.
என்னுடைய வடிவத்தைக் காண முடியாதவாறு உனது தற்புகழ்ச்சி உன்னைக் குருடாக்கி விட்டது;
தன்னல வெற்றிக் களிப்பு உன்னைச் செவிடாக்கி விட்டது;
அதனால், நான் உன்னை அழைத்தபோது உன்னால் அந்த அழைப்பைக் கேட்க முடியவில்லை; தன்னலத்துடன் தேடினாய், அதனால் நீ தனியனாகி விட்டாய்,
அதனால் என்னிடம் வருவதற்கான நெறி உனக்கு மறைக்கப்பட்டது.
ஆனால், இப்போது செருக்கினை நீ அகற்றிக் கொண்டதால், உன்னால என்னைக் காணவும் என் குரலைக் கேட்கவும் முடிந்தது.