த. கோவேந்தன் 57
வினவு-விடை தருவேன்; தேடு அது உனக்குக் கிடைத்துவிடும்.
மாணவன் எனக்கு ஆறுதலை அளியுங்கள் என் மதிப்புக்கு உரிய ஆசானே! நான் சோர்வடைந்து விட் டேன். என்னைப் பலம் மிக்கவனாக ஆக்குங்கள்;
நான் பலம் இழந்தவனாக நிற்கிறேன்.
அறிவை அளியுங்கள். நான் அறிவில் பின்னடைந் துள்ளேன்.
ஆசான் எவன் தன்னலத்தைவிட்டு என்னிடம் தஞ்சம் புகுகிறானோ, அவன் எக் காலத்திலும் தனித்து விடப்படமாட்டான்;
எனது சொல்லே அவனுக்கு ஆறுதலை அளிக்கும்;
எனது அறமே அவனின் பலம்,
எனது கட்டளைகளே அவனுக்கு அறிவூட்டலும், அறிவும்.
மாணவன்: சொல்லுங்கள், நான் கேட்கின்றேன்;
உங்கள் அறநெறிகளை வெளியிடுங்கள், அதன் வழியே தரன் செல்வேன்;
எனக்குக் கட்டளையிடுங்கள், நான் உங்கள் தொண் டின்; உங்களுக்குப் பணிவேன்; நீண்ட காலமாகத் தேடிக் கொண்டிருந்த ஆசான் நீங்களே என்பதனால் உங்களை இப்வேகத் கண்டு கொண்டேன்; உங்களிடமிருந்து நான் பிரியேன்.
எவன் ஒருவன் தன்னலத்தின் பின்தொடர்கின் றானோ அவனை நான விலக்கிக் கொள்வேன்;