58 வெற்றி மேல் வெற்றி பெற...
ஆனால், எவன் ஒருவன் தன்னலத்தை விலக்கிக் கொள்கிறானோ அவன் எப்போதும் என்னுடனேயே இருப்பான்.
மாணவன் : இக் கணத்திலிருந்தே;உங்களைப் பற்றிக் கொள்கிறேன்;
நான் வீணான, வெறுமையான பேராசைகளைப் பின் தொடர்ந்தேன்,
அதனால், பொய்ம்மை எனும் மயக்கத்தின் வலையில் அகப்பட்டதால் உங்களின் முன்னைய நிலையை நான் அறிந்திலேன்;
ஆனால் இப்போது, என் ஆசானே! உங்களை நான் கண்டு கொண்டேன்.
உங்கள் மொழிகளைக் கேட்டுப்பணிவுடன் செயல்படும் உங்கள் குழந்தையாக இருப்பேன்;
அறிவூட்டும் உங்கள் வாய்மொழிகளைக் கேட்கும் உங்கள் மாணவனாக இருப்பேன்;
வழிகாட்டியாக நீங்கள் என்னை எங்கு அழைத்தாலும் தொடரும் உங்கள் மாணவனாகவே இருப்பேன்.
ஆசான் : பணிவு உனதே, ஒ மாணவனே! உன்னை என்னில் ஏற்றுக் கொண்டேன்.
நீ எனது பேரரசுக்குள் செல்வதற்கு உள்ள வாயிலுக் குள் நுழைந்து விட்டாய்.
நேர்மையான அரசாட்சிக்குள்ளும் தகுதியின் மிகுதி யால் நீ புகுந்து விட்டாய்.
இப்போதிருந்தே நீ தன்னலத்தைவிட்டு உண்மை யையே பின்பற்றுவாய்;
நீ எடுத்துக் கொண்ட கடும் முயற்சியின் பயனாகவே நுழைந்துவிட்டாய்,