பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வெற்றி மேல் வெற்றி பெற...

பழியற்ற வாழ்க்கையினால் அமைதிக்கான வழியைக் கண்டு கொள்வாய்.

மாணவன் : ஒ! ஆசானே! எனது நிலையற்ற மனத்தைப் பொறுத்து அருளுங்கள்.

எண்ணற்ற கருத்துகளினால் நான் தடுமாறிக் கொண்டி ருக்கிறேன்;

பல கல்விச் சாலைகளில் பயின்றதனால் திகைப்பு அடைந்துள்ளேன்;

மாயத் தோற்றங்கள் என்னுடைய கண்களை மறைக் கின்றன.

ஐயங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. அதனால், நான் எங்கே செல்ல வேண்டும் என்பதற் கான வழியைக் காணேன்.

எவ்வாறு தேடுவதெனக் கற்றுக் கொடுங்கள்;

எப்படி அதனைப் பயில்வது என்பதனையும், குறை கூறா வாழ்வெனும் உடையை அணியவும் கற்றுக் கொடுங்கள்.

ஆசான் : ஒ, மாணவனே! மாயத் தோற்றங்களும் ஐயங்களும் உன்னுள்ளேயே உள்ளன.

அதேபோல், மெய்ம்மையும் உறுதிப்பாடும் உன் உள் னேயே இடம் பெறுகின்றன .

உனது தவறுதல்களினால் நீ குருடனாகியுள்ளாய்.

அந்தத் தவறுகளை அகற்றிவிட்டால் உண்மையை நீ அறிந்து கொள்வாய்.

அதனால், புனிதமான மூழ்க (தியான)த்திலே ஈடுபடு”