பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வெற்றிமேல் வெற்றி பெற...

ஆசான் : எவன் உண்மைக்கு அடிபணிகிறானோ அவன் புனிதமாக்கப்படுகிறான்.

அவன், மன அமைதியின்றி அல்லல்பட மாட்டான். ஆனால் அமைதிக்கான பேறு பெறுவான்.

துறவு

மாணவன் : தூய ஆசிரியரே! தங்களது ஒளி எனது மனத்தை ஊடுருவிச் செல்கிறது.

எனது துயரத்திற்கும் தொல்லைக்கும் காரணங்களை இப்போது அறிகிறேன்.

மனித இனத்திற்குள்ள துயரத்தைப் புரிந்து கொள் கிறேன்.

ஏனெனில், எனது இன்னல்களே உலகத்தின் இன் னல்கள்;

துயரமும் தொல்லையும் தன்னலத்தில் வேரூன்றி யுள்ளன என்பதைக் காண்கிறேன்.

தீமையும் துயரமும் தன்னலத்தின் ஆசைகளில் உள்ளன.

அதனால், தன்னல ஆசைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட வேண்டும்.

ஒ, ஆசானே! தன்னலத் துறவுப் பாதைக்கு என்ன வழிகாட்டுங்கள்.

மனத்திலிருந்து தன்னலத்தை எப்படி ஒழிப்பது என்பது பற்றி எனக்குக் கற்றுத் தாருங்கள்.

துறவின் உண்மையை எனக்கு வெளிப்படுத்துங்கள்.