பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 77

எனது நெஞ்சத்தின் அடித்தளத்திலிருந்து இவற்றை ஒழித்து விடுவேன்.

ஏனெனில், இவை எவ்வாறு குருட்டு வழிகளில் மனிதரைக் கொண்டு செல்கின்றன என்பதை இப்போது காண்கிறேன்.

மனிதர்களின் கால்களைச் சிக்கவைக்கும் துன்பவலை இவற்றினாலே பின்னப்பட்டுள்ளது.

ஆழம்மிக்க குழிகளை இவையே தோண்டிவிடுகின்றன, மனிதர்களை அதற்குள் வீழ்த்துவதற்காக.

ஒ தெய்வீக முதலே! எனக்கு வெளிப்படுத்தியவற்றில் நான் களிப்படைகிறேன்.

புனிதமான உம்மை அடைவதற்கான நெடுஞ்சாலையை எனக்குத் திறந்துவிட்டீர்.

அமைதிக்கான நேரிய வழியை எனக்குக் காட்டி விட்டீர்.

மெய்யான அறிவு நெறியில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டீர்.

உம்மை நான் பின் தொடர்வேன்.

உமது பொது அறமுறைக் கட்டளைகள் உலகத்திற்கு என்னை கூட்டிச் செல்லும்.

ஆசான் : நான் கூட்டிச் செல்லும் இடமெல்லாம் பின் தொடருபவனே தூய்மை பெறுகிறான்.

உயர்வான விண்ணுலகில் உள்ள இடங்களுக்கும் அவன் ஏறிச் செல்வான்.

பிழையில்லாத தோற்றத்தைப் பற்றிக் கொள்வான்.