78 வெற்றி மேல் வெற்றி பெற.
எல்லாப் பொருள்களையும் பார்க்கவல்ல உண்மையின் கண்களால் அவன் பார்த்து மகிழ்வான்.
உள்ளத் துாய்மை
象 மாணவன் ; உமது ஒழுங்கு முறையையும் தூய்மையை யும் நான் கடைப்பிடிக்கும் வேளையிலும்,
துறவுக்கான தெய்வீக நெறியில் நடந்து கொண்டி
ருக்கையிலும் உமது தூய்மையின் அழகை நான் கவனித்துப் பார்ப்பேன்.
அது தெய்வீகமான தூய்மையை வெளிப்படுத்தும்.
மிக உயர்வான உண்மையை நான் அறிய வேண்டும்;
ஒ, ஆசானே! உமது முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
உம்மை உண்மையாகவே உற்று நோக்குவேன்.
ஆசான் : எவன் சரியான முறையில் துறவு கொள் கிறானோ,
தன்னலமுடைய நெஞ்சத்தைப் பணிவுடன் அகற்று கிறானோ,
தன்னல இன்பங்களுக்கின்றி விடாமுயற்சியுடன் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறானோ,
அவனே எனக்குத் தனியானவன், எனது துரய்மை யைக் கண்டறிபவன்;
அவன் என் றன்றியுடையவன், கட்டாயம் எனது முகத் தைக் காண்பான்.
அவன் என்னால் தெரிவு செய்தவன், இறுதியில் என்னிடமே வந்தட்ைவான்.