த. கோவேந்தன் 88
நேர்மை
ஆசான் ! ஒளியின் மகனே! எழுந்து நின்று நேர்மை எனும் உடையை அணிந்து கொள்;
மகிழ்வுற்று இன்பமான இறைவழியில் நுழைந்து விடு;
உனது கண்களைத் திறந்து உண்மையின் புகழை. உற்றுப் பார்;
ஏனெனில், நீ உண்மையாகவும் கீழ்ப்படிந்தும் இருக் கிறாய்;
பொறுமையாகவும் துன்பத்தைத் தாங்கியும் உள்ளாய், நீ கைப்பற்றி வெற்றியீட்டியும் விட்டாய்.
தன்னலம் என்னும் வல்லமை மிக்க பகைவனை நீ கொன்று விட்டாய்;
அறியாமை என்னும் மிகப் பரந்த இருளைக்கூட நீ கலைத்துள்ளாய்;
பொய்த் தோறறத்தை, மனத்திலிருந்த மிக்க ஆற்றல் வாய்ந்த திரையைக்கூட சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து விட்டாய்,
அதனால், இனிமேல் அறிவுப் பாதையில் நீ நடந்து செல்லலாம்;
நட்பமைதியில் நீ குடியிருப்பாய்,
அழியாப் புகழ் ஒளியில் நீ திளைத்து விடுவாய்.
உண்மையின் மகனே! எனது தெய்வீக நிலையில் எழுச்சி பெறு!
நேர்மை எனும் ஒளிபரப்பும் வாழ்க்கையை அறிந்து, கொள்!