பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 88

நேர்மை

ஆசான் ! ஒளியின் மகனே! எழுந்து நின்று நேர்மை எனும் உடையை அணிந்து கொள்;

மகிழ்வுற்று இன்பமான இறைவழியில் நுழைந்து விடு;

உனது கண்களைத் திறந்து உண்மையின் புகழை. உற்றுப் பார்;

ஏனெனில், நீ உண்மையாகவும் கீழ்ப்படிந்தும் இருக் கிறாய்;

பொறுமையாகவும் துன்பத்தைத் தாங்கியும் உள்ளாய், நீ கைப்பற்றி வெற்றியீட்டியும் விட்டாய்.

தன்னலம் என்னும் வல்லமை மிக்க பகைவனை நீ கொன்று விட்டாய்;

அறியாமை என்னும் மிகப் பரந்த இருளைக்கூட நீ கலைத்துள்ளாய்;

பொய்த் தோறறத்தை, மனத்திலிருந்த மிக்க ஆற்றல் வாய்ந்த திரையைக்கூட சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து விட்டாய்,

அதனால், இனிமேல் அறிவுப் பாதையில் நீ நடந்து செல்லலாம்;

நட்பமைதியில் நீ குடியிருப்பாய்,

அழியாப் புகழ் ஒளியில் நீ திளைத்து விடுவாய்.

உண்மையின் மகனே! எனது தெய்வீக நிலையில் எழுச்சி பெறு!

நேர்மை எனும் ஒளிபரப்பும் வாழ்க்கையை அறிந்து, கொள்!