86 வெற்றி மேல் வெற்றி பெற...
எதையும் விரும்புவதில்லை, அதனால் அவன் துயர்ப் படுவதில்லை;
இன்பம் நுகர்வதற்கு அவன் அவரக் கொள்வதில்லை. அதனால் துயர் அவனை வெற்றி கொள்வதில்லை.
தன்னல அடக்கத்தில் முழுமையானவன், அதனால் உயர்வான அமைதி அவனைப் பற்றிக் கொள்கிறது.
குறை கூறக் கூடாது, தீவிரம் அடையக் கூடாது, பழிவாங்கக் கூடாது;
கொண்டதை விடrமையோ ஒரு சார்பாகவோ இருக்கக் &all-fros
எல்லாப் பக்கங்களிலும் உமது அமைதியைக் கைக் கொள்ள வேண்டும்.
நேர்மையாகவே இருந்து உண்மையைப் பேசு. இனிமையுடனும், இரக்கத்துடனும் அறம் செய்; முடிவில்லாப் பொறுமையில் மூழ்கி விடு. அன்புடன் இறுகவே பிணைத்துக் கொள். அப்போது உனது செயல்களை அது தக்க முறையில் உருவாக்கும்.
எல்லோரையும் சமமாகவே கருது. யாரும் உன்னைத் தொந்தரவு படுத்தாத வகையில் நடந்து கொள்.
எண்ணுபவனாகவும் அறிவுடையவனாகவும், வலிமை மிக்க இரக்க நெஞ்சம் படைத்தவனாகவும் இரு.
உன்னை ப் பற்றிய எண்ணம் மீண்டும் புகுந்து களங்கபபடுததாதவாறு மிகவும் விழிப்பாக இருந்து கொள்,
உனது தன்னலம் கலைக்கப்பட்டது, அழிக்கப்பட்டது என்று நினைத்துக் கொள்.