90 வெற்றிமேல் வெற்றி பெற...
அதன் செயற்பாடுகள் எல்லாமே அறமானவை.
அது நிலையானது, அதனால் மாற்றங்கள் இடையிலும் உறுதியுடன் நிலைக்கிறது.
அதனால், எல்லாமே பாதுகாக்கப்படுகின்ற எவ்வித குழப்பமும் ஏறபடுவதில்லை.
பேரின் பத்திலும் பேராண்மையிலும் நன்மை பாதுகாக் கப்படுகிறது.
தண்டனையாலும் துன்பத்தினாலும் தீமை தூய்மையா கிறது. ~
அறிவு அமைதியினால் முடிகுடிச் சிறக்கிறது.
அறியாமை, ஆறுதல் இன்மையால் தண்டிக்கப்படு கிறது.
இரு வகையான நடவடிக்கைகளினால் அது செயல்படு கிறது.
அது முடிவற்ற விளைவை உண்டாக்குகிறது.
ஒவ்வொரு சிந்தனையையும் செயலையும் குறித்துக் கொள்கிறது.
ஓ அன்பனே! உயிர்ப்பான தோற்றத்திற்கு நீ பேறு பெற்று விட்டாய்.
இப்போது உலகைப் பார்த்துச் சொல் நீ என்ன காண் கிறாய் என்று.
மாணவன் : ஒ ஆசானே! அறியாமை என அழைக்கப் படும் ஆற்றல்மிக்க இருளைக் காண்கிறேன்.
ஆசையின் தீப்பொறிகள் அனல் கக்கியவாறு பதுங்கி இருப்பதைக் காண்கிறேன்.