த. கோவேந்தன் 9 !
அந்தத் தீப்பொறிகள் எப்படிப் பலம் அடைகின்றன என்பதைப் பார்க்கிறேன்.
அவை தழல்கொண்டு எரியும் வெறி உணர்ச்சியாகத் தீவிரம் அடைகின்றன.
அந்த வெறி உணர்ச்சிகளைத் தனிப்பதற்காகவே துயரமெனும் பெரு முகில்கள் எல்லா மாந்த இனத்தின் மேலும் உள்ளன.
ஆசான் ; நீ நன்றாகக் கண்டு கொண்டாய்.
திரும்பவும் பார்த்துவிட்டுக் கூறு நீ கண்டவற்றை.
எனது பார்வை துயரத்தை மறைத்திருந்த முகில் திரையை கிழித்துச் சென்றுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையென்னும்பெருமை வாய்ந்த ஒளியைக் காண்கிறேன்;
அங்கே இருளே இல்லை; எந்த ஆசையும் அந்த இடத்திற்குள் புக முடியாது. அதனுடன், சுட்டெரிக்கும் வெறி உணர்வுகளும் அங்கே இல்லை;
அங்கே அழுகையும் ஆறுதலின்மையும் இல்லை. ஆசான் : அன்பனே! வாழ்க்கையின் அறமுறையை நீ பார்த்துவிட்டாய்,
பொது அறமுறையின் இரட்டிப்பான செயல்களை உணர்ந்து கொண்டாய்.
ஆகையால் ஊட்டிவளர்க்கும் அறியாமை அங்கே உள்ளது;
ஆசையே வேதனை எனும் பசியை .ண்டாக்குகிறது;