இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
த. கோவேந்தன் 95
நோயை உண்டாக்கியவன் எவனோ அவனே மகனி த ரின் நோயைத் தீர்ப்பவனாகின்றான்:
சிறுவன் பயிற்சியாளனாகியுள்ளான் .
மாணவன் ஆசிரியனாகிவிட்டான்.
மாணவனும் ஆசானும் ஒருவனே;
நான் எப்படி இருக்கிறேனோ நீயும் அப்படியே இருக் கிறாய்
அமைதியில் என்னுடன் உறுதியாக இரு.
நன்மைக்கான வழிபாடு
இபபோது அமைதி உறுதியுடன் நிலைக்கிறது. தன்னலம் தகர்க்கப்பட்டுள்ளதனால் மீண்டும் அவா அங்குக் குடியிருப்பதில்லை;
உண்மை பெறப்பட்டுள்ளது; துன்பம் உண்டாக்கி அற்றுப் போய்விட்டது;
வேதனையின் பயணம் முடிவுற்றது,
துன்பமும் இருளும் இனிமேல் நிகழாது; ஐயமும் அழுகையும் இனிமேல் இல்லை; ஆறுதல் இன்மையும் துயரமும் மறைந்துவிட்டன.
அன்பு உலகைத் தழுவுகிறது;
துன்பப்பட்டவர்கள் எல்லோர்க்கும் இன்ப அமைதி