பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? அபூர்வ சிருஷ்டிகள் அல்லர். எல்லோர்க்கும் தெரிந்தவர்களே. என்னிடம் முனிவு சிறிதே முளைக் கட்டும். உடனே என் தோழன் முகம் சுருங்கிக் கருகுவதைக் காணலாம். நான் சிறிதே வருந்தட்டும். உடனே என் தோழன் கண்களில் நீர் ததும்பிவிடும். நான் அணுவளவு கவலை கொள்ளவேண்டியது தான், அந்த கஷணமே என் தோழனின் முகம் ஒளி மங்கிவிடும். அவன் வயிறுகூடத் தன் ஜீரண வேலையை நிறுத்திவிடும். நான் அறிவை அபி விருத்திசெய்தால், அடுத்தது காட்டும் பளிங்குபோல், என் தோழன் முகம் தேஜஸ் நிறைந்து தோன்றும். ஒரு துளி ஆனந்தம் என் உள்ளத்தில் விழட்டும்! உடனே என் தோழன் துள்ளிக் குதிப்பதை நீங் கள் காணலாம். மிகச் சிறிய என் எண்ணங்களும் இச்சைகளும் என் தோழனிடம் பிரதிபலித்துத் தோன்றுவதால், என் தோழன் சாயல்களைக் கண்டே என்ன என் இதர நண்பர்கள் அறிந்து கொள்கிருர்கள். என் காரியங்கள் என் தோழனிடம் காணப்படு கின்றன என்பது மட்டுமன்று. என் தோழன் இல் லாமல் நான் இந்த உலகில் யார்? என் தோழன் மறைந்து விடட்டும், அந்த நிமிஷமே கான் அனதை தான். என்னே என் பெற்ருேர், உற்ருர், உறவினர் கூட அலட்சியம் செய்துவிடுவர். எனக்கு இந்த உலகில் எவ்வித வேலையும் இல்லை. 24