பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு : அம் என்னல் அறிந்து அனுபவித்து ஆனந்திக்க முடியாமல் போகுமே I என் தோழன் இல்லாவிட்டால் - ஏன் என் தோழன் இருந்தும் குருடாய் விட்டால் - நானும் குரு டனே. எதைத்தான் காணமுடியும் ? குழந்தை களைக் காண்பேனே ? நண்பர்களைக் கண்டு களிப் பேனே? மகாத்மாக்களை நேரில் தரிசிக்கும் பாக்கி யம் கிடைக்குமா ? இயற்கை நமக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் நம் மகிழ்ச்சிக்கென்று விநோதம் விநோத மாய்த் தயாரிக்கும் இன்பக் காட்சிகள் எனக்கு எள்ளளவும் உண்மையாகுமோ ? இங்ஙனம் சகல விஷயங்களிலும் என் தோழன் மூலமாகவே நான் ஸ்துால சூட்சம உலகங்கள் இரண்டிலும் சஞ்சரிக்கும் சக்தியுடையவ ளுவேன். என்னையும் இந்த உலகத்தையும் இணேத்து நிற்பவன். என் தோழனே. நான் இதை எழுதுகிறேன். நான் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்ள லாம். நீங்களும் நம்பிக்கொள்ளலாம். ஆனல் உண்மை அதுவாகுமோ ? நான் எண்ணங்களை வகுக்கிறேன். அவன் கைகள்தானே. அவை களைப் பிறர் பார்க்கும் வண்ணம் இவ்விதம் எழுதி அமைக்கின்றன ? இந்த உலக இன்பங்களை நான் அனுபவிக்கி றேன - என் தோழன் அனுபவிக்கிருன? இது 26