பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(7. சுதந்திரத்திற்குச் சுருக்க வழி) சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தேசத்தில் இரண்டாவது சார்லஸ் என்பவர் அரசாண்டுகொண்டிருந்தார். அவர் ஜனங்களுக்கு நன்மை செய்யும் செங்கோல் மன்ன் ராய் இருக்கவில்லை. குடிகளின் பணத்தை வீணுன விஷயங்களில் ஏராளமாக விரயம் செய்வதையே வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். அதனுல் தேச மக்களுக்கு அவரிடத்தில் வெறுப்பு அதிகம், ஆயினும் அவருடைய தவருன நடைமுறைகளைப் பகிரங்கமாகக் கண்டிக்க யாரும் துணியவில்லை. ஆல்ை அந்தச் சமயத்தில் ஆன்ட்ரூ மார்வெல் என்னும் ஒரு கவிஞர் பெருமான் இருந்தார், அவர் பாடுவதில் சமர்த்தர் என்பது மட்டுமன்று. பார்லிமெண்டு அங்கத்தினராகவும் இருந்தார். ஆல்ை அவர் அதிகமாகப் பேசுவதில்லை. அவருக்குப் பேசுவதுதான் சிரமம் , எழுதுவது சிரமமே இல்லை. அவர் யாரைக் குறித்தானுலும் சரி, எந்த விஷயத் தைப்பற்றி யானுலும் சரி, உள்ளத்தில் தைக்கும்படி யான விதத்தில் கேலி செய்து எழுதுவதில் வல்லவர், 46