பாலாவின் சொந்தக் கிராமத்திற்குத்தான். அவளே மணந்து கொண்டு, செட்டில் ஆகிவிடலாம் என்பது அவனது லட்சியமாகப் போய்விட்டது.
எத்தனை நாள் தாண்டமுடியும் ! பிறகு தனது எதிர்கால சிந்தனையை பாலா ஊட்டி விட்டாள். அந்த சிந்தனை தந்த வலிமைதான். அவனே சொல்லாமல் கொள்ளாமல் செயல்பட வைத்தன. முடிவு... ஓடி விட்டான்.
இத்தனை விஷயமும் சுந்தரத்திற்குத் தெரியலாமா இருக்கும் ! சுந்தரம் அறியாத விஷயங்கள் உண்டா ? அதுவும்' இதுபோல்' உள்ளதை ? இதில் தான் அவர் எக்ஸ்பர்ட் ஆயிற்றே ?
ஆரம்பத்தில் முத்துசாமியின் காதலைத் தடுப்பது போல் அவர் தடுத்தார். அப்பொழுது தானே முத்துசாமிக்கு அதில் வேகம் வளரும் என்ற சைகாலஜி அவருக்குத் தெரியாதாத என்ன ?
அதை அறியாத முத்துசாமி, அவருக்கு லஞ்சம், கொடுத்துத் தன் காதலை, காரியத்தை சரிகட்டிக் கொண்டான். இருபக்க வரவினால், சுந்தரம், தன் குடும்பத்தில் செலவை சரி கட்டிக் கொண்டார்.
இந்த நாட்டிலே, தான் தான் பெரிய கோச் என்று தருக்கித் திரியும் அவர், தன் நிலையிலேயே எப்படித் தாழ்ந்து போகிறார் என்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால். வசதியாக வாழவேண்டும் என்ற ஆசை. தன் வறுமையை விரட்டிவிட வேண்டும் என்ற வேகம். அதனால், பாதை மாறிப் போனார், பலன் ?
உருட்டி விழிக்கப் போய் உள் ள விழியும் போன கதை போல ஆகிவிட்டது.