பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18.

வந்தவன் தந்த சேதி



ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை எழுப்பிக் கொண்டிருந்தன. சர்க்கஸ் கம்பெனி ஒன்று ஊருக்குள் வந்தால், அதை எப்படி பார்ப்பார்களோ எப்படிப் பேசுவார்களோ, அந்த பாணியில், இந்த விளையாட்டுக்களைப் பற்றியும் பொதுமக்களிடையே பேச்சுக்கள் நடைபெற்றன.

இவ்வளவு செலவு பண்ணி ஒரு போட்டியா? நம்ம நாட்டுக்கு இது தேவையா? அநியாயமா இப்படி பண்ருங்களே! ஒரு திட்டம் போட்டு மக்கள் தரத்தை முன்னேத்தக் கூடாதா? விளேயாட்டுக்கு இப்படி ஒரு விழாவா! வெட்டிச் செலவா?

விமரிசனங்கள் பல மாதிகிரியாக விலையாடிக் கொண்டிருந்தன. யானேயைப் பார்த்து குருடர்களைப் போல அவரவர் அறிவுக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார்கள். ஏசிக் கொண்டிருந்தார்கள் .

பொழுது போகாதவர்கள், போக்கத் தெரிந்தவர்கள் , என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்கிற சந்தேகம்