பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
119


பேர்வழிகள், தவறு கண்டு பிடிக்க வேண்டும் என்று துண்டில்கண் கொண்டவர்கள். எல்லோருக்கும் இந்த விளையாட்டு 'ஒரு தமாவடிாக' இருந்தது.

குணசேகர் படுத்தப் படுக்கையிலேயே கிடப்பதால், இந்தப் போட்டிகளைப் பார்த்தால். கொஞ்ச நேரம் பொழுது போகுமே என்று, இன்பநாதன் அவரது அறையில் கொண்டு வந்து டெலிவிஷன் பெட்டியை வைக்க ஏற்பாடு செய்திருத்தார்.

விளையாட்டு பற்றிய செய்திககளயே காதில் வாங்கிக் கொள்ள மறுத்த குணசேகர், இதற்கும் ஒத்துக் கொள்ள வில்லை. இன்பநாதன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்குப் பிறகு, அரை மனதுடன் அவர் சம்மதித்தார்.

அவ்வப்போது. வேண்டும் போது நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் கூடைப்பந்தாட்டப் போட்டி ஒன்று நடத்தது. சைளுவுக்கும் வடகொரியாவுக்கும் தான், ஆட்டம் இன்னும் 1 நிமிடம் தான். பந்தை யாரிடமும் தராமல் தட்டிக் கொண்டு இருந்தார்கள் சீன ஆட்டக்காரர்கள். 1 வெற்றி எண் அதிகம் அவர்களுக்கு.

இந்த நேரத்தில், வடகொரிய ஆட்டக்காரர்கள் வசம் பந்து வந்ததும், உடனே தங்கள் பயிற்சியாளரைப் பார்த் தார்கள். அவர் ஒரு சைகை காட்டிகுt. உடனே ஒரு ஆட்டக்காரர் பந்தை வளையம் நோக்கி எறிந்தார். அது வளையத்திற்குள்ளே விழவுசில விசில் ஊதவும் சரியாக இருந்தது.

1 வெற்றி எண் வித்தியாசத்தில், கூட கொரியா வென்றது.