பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19. நல்லதைத்தானே நினைத்தேன்!


அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி இன்பநாதனே வீறிட்டு அலற வைத்தது.

படிங்க என்றார் குணசேகர் மெதுவாக...

கல்லூரி மாணவனுக்கு பயங்கர விபத்து.

மின்சார ரயிலில் பயணம் செய்த வேணு என்ற கல்லூரி மாணவன். மாம்பலம் சைதாப்பேட்டைக்கு இடையில் கீழே விழுந்து விட்டார். வலதுகை நொறுங்கிப் போனதால் மயக்க மடைந்த அந்த வாலிபரை, ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றார்கள்.

அதிகமாக மது குடித்திருத்த காரணத்தால் தான் கீழே விழுந்து விட்டார். என்று போலிசார் கூறினார்கள்.

இன்பநாதன் படித்து முடித்ததும், குணசேகர் திகைத்தவாறு. முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டார்.